சாலையோரம் ஆபத்தான குழி

Update: 2022-08-01 09:19 GMT

திருவிதாங்கோடு அருகே வட்டம் சந்திப்பில் பஸ் நிறுத்தம் அருகே கேபிள் பதிப்பதற்காக பல வாரங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. அதன்பின்பு அதை மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த பகுதியில் பஸ் ஏறுவதாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இரவு நேரங்களிலும் ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அந்த வழியாக ெசல்கிறவர்கள் குழிக்குள் தவறி விழுந்து ஆபத்து ஏற்படும் முன்பு அதை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார பத்மநாபன், திருவிதாங்கோடு.

மேலும் செய்திகள்