நடை பாதை தேவை

Update: 2022-07-30 09:22 GMT

மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் கருங்கல் செல்லும் சாலையில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு சாலையின் இருபுறமும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால், பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, சாைலயின் இருபுறமும் நடைபாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்டல் வினு, காப்புக்காடு. 

மேலும் செய்திகள்