காத்திருக்கும் ஆபத்து

Update: 2022-07-30 09:15 GMT

நாகர்கோவில், நேசமணிநகரில் இருந்து நெசவாளர்காலனி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். இந்த சாலையின் தொடக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மேல் சிமெண்ட் சிலாப் போட்டு மூடியுள்ளனர். தற்போது இந்த மூடி சேதமடைந்து, கம்பிகள் வெளிேய தெரிந்த வண்ணம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக ெசல்கிறவர்கள் உடைந்த சிலாப்பின் மீது கால் வைத்தால், தவறி பாதாளசாக்கடை குழியில் விழ வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படும் முன்பு இதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்