நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அணியாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 4 சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் 4 சாலைகளில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் சந்திப்பு பகுதியில் வரும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சிறு சிறு விபத்துகள் நடந்துள்ளது. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் அணியாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-ராமசாமி- அணியாபுரம்