சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-29 09:00 GMT

கோட்டார் சவேரியார் ஆலயம் சந்திப்பில் இருந்து கனரா வங்கி செல்லும் சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி காற்று வீசுவதால் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

மேலும் செய்திகள்