பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-07-28 13:49 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையில் ஆபத்தான பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். மேலும் பள்ளம் இருப்பதால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்