தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சரபோஜி மார்க்கெட்டு மற்றும் கடைகள் அதிகம் இருப்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கிநிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை.