தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி காலனி தெருவில் தார்ச்சாலை வசதி கிடையாது. பல ஆண்டுகளாகவே மண் சாலையாக உள்ளது. மேலும் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியும் நிறைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் .
சேகரன், தொண்டராயன்பாடி