வேகத்தடை வேண்டும்

Update: 2023-08-27 11:24 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசல், புதுப்பட்டிணம் பகுதியில் உள்ள கிராம இணைப்பு பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். வேகத்தடை இல்லாததால் அந்த பகுதியில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்