சாலை சீரமைக்கப்படுமா ?

Update: 2023-07-09 17:15 GMT

சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆதிதிராவிடர் காலனியில் இருந்து ஏரிகாடு வழியாக ஊத்து ஓடை, சேனை கவுண்டனனூர் செல்லும் வழியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக தேக்கம்பட்டி அரசு மேல்நிலைபள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சஞ்சய், தேக்கம்பட்டி, சேலம்.


மேலும் செய்திகள்