சாலையை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-06-04 15:45 GMT

ஓசூர் 29-வது வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- குபேந்திரன், ஓசூர்.

மேலும் செய்திகள்