சாலை வசதி வேண்டும்

Update: 2023-05-28 14:35 GMT


தஞ்சையில் கீழவாசல் வழியாக பழைய ராமேஸ்வரம் செல்லும் சாலை அருகே நாகைரோடு சந்திக்கும் இடத்தில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை.

மேலும் செய்திகள்