குறுகலான சாலை

Update: 2023-05-17 09:35 GMT

பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகவுண்டன்பாளையம் வழியாக நடுப்புணியை இணைக்கும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த சாலையில் எதிர் எதிரே வரும் 2 வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே புதர் செடிகளை வெட்டி அகற்றி சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்