சாலைவசதி வேண்டும்

Update: 2022-07-22 13:29 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் ஊராட்சியில் வள்ளுவ புள்ளி கிராமம் மேலத்தெரு உள்ளது. இந்த தெருவில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்