சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் விபத்து

Update: 2023-04-23 17:37 GMT

சேலம் அண்ணா பூங்கா பஸ் நிறுத்தம் இருபகுதியிலும் சாலையில் ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த பகுதியில் தினமும் கிழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, ஜல்லி கற்கள் சிதறி பஸ்சுக்காக காத்திருப்போர் மீது விழுந்து அவர்களும் காயம் அடைகின்றனர். இந்த வழியாக தினமும் அரசு அதிகாரிகள் பயணிக்கத்தான் செய்கின்றனர். யாரும் இதனை கண்டுகொள்வது இல்லை. எனவே விபத்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற வேண்டும்.

-சுதாகர், சேலம்.

மேலும் செய்திகள்