விபத்துகளை தடுக்க தடுப்புகள் தேவை

Update: 2023-04-19 17:30 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் கைலாசநாதர் தேரோட்டம் காரணமாக நங்கவள்ளி மற்றும் சங்ககிரி சாலையை இரண்டாக பிரிக்கும் தடுப்புகளை அகற்றிவிட்டனர். தேரோட்டம் முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை தடுப்புகள் வைக்கவில்லை. இதனால் முதியவர்கள், மாணவ, மாணவிகள் ஆபத்தான நிலையில் சாலையை கடக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி விபத்துகளை தடுக்க அந்த பகுதியில் தடுப்புகள் வைக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பக்தவச்சலம், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்