பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-26 15:54 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மகனூர்பட்டி ஊராட்சி நரிக்கானூர் கிராமத்தில் இருந்து விசுவாசம் பட்டிக்கு செல்லும் பாலம் கடந்த ஆண்டு பெய்த மழையில் உடைந்து விட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இந்த பாலம் தற்போது வரை சரி செய்யப்படாமல் உள்ளது. அந்த பாலத்தின் வழியே செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக அந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-மணிகண்டன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்