சாலை நடுவே பள்ளம்

Update: 2023-03-22 15:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலைய சாலையில், பெரியார் நகரில் வேல்முருகன் கோவில் உள்ளது. நகரின் முக்கிய சாலையான இந்த சாலை வழியே நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் வந்து செல்கின்றன. மேலும் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் வேல்முருகன் கோவில் எதிரே சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, ஓசூர்.

மேலும் செய்திகள்