பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-22 10:59 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் சாலையிலிருந்து தச்சதெருவிற்கு திரும்பும் இடத்தில் சாலையில் நீண்ட நாட்களாக பெரிய பள்ளம் உள்ளது. இதன் அருகில் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்