சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி 3-வது வார்டு சோதுகுடி கிராமம் குப்புபிச்சை ராவுத்தர் தெருவில் நீண்ட காலமாக சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் இச்சாலையோரத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகள் நடந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்குமா?