ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி- கீரந்தை சாலையில் மருதகம் விலக்கில் இருந்து கீழப்பனையூர் வழியாக மேலப்பனையூர், எஸ்.ஆர்.என்.பழங்குளம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.