அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் இருந்து அரியலூர் வரை தற்போது சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.