‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-08-09 13:08 GMT

கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதி மகாத்மா காந்தி நகரில் தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்தனர். இதற்காக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்