போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-03-08 17:56 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர்-பென்னாகரம் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ஏரியூரின் மையப்பகுதியில் தார்சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக இந்நிலை தொடர்வதால் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து பாதிப்பால் அவதிப்படும் வாகன ஓட்டிகள் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-கார்த்திக், ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்