அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், முத்துசேர்வாமடம் இளையபெருமாள்நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் கிராமத்தில் இருந்து பாகல்மேடு கிராமத்திற்குச் செல்லும் சாலை நீண்ட நாட்களாகப் பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குத் தார்சாலை முற்றிலும் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை புதிய தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.