ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தார்சாலை

Update: 2023-03-08 16:59 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மூட்லுவில் இருந்து அகரம் செல்லும் தார்சாலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதனால் தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தராஜ், அத்தி மூட்லு, தர்மபுரி.

மேலும் செய்திகள்