குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-01 16:53 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழியில் கட்டனாச்சம்பட்டி கிராம சாலையும், புதுப்பாளையம் சாலையும் இணையும் இடத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களிலும் இந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நக்கீரன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்