உடைந்த தரைப்பாலம்

Update: 2023-03-01 16:42 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அவுசிங் போர்டு குடியிருப்பு காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் பாதி உடைந்த நிலையில் காணப்படுகிறது. மீதி உள்ள தரைப்பாலமும் எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நடந்து செல்லும் போது பாலம் உடைந்து விழுந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த தரைபாலத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்