வேகத்தடைகள் வேண்டும்

Update: 2023-03-01 13:52 GMT


அந்தியூர் தவுட்டுப்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே 3 சாலைகள் சந்திக்கும் பிரிவு உள்ளது. இந்த 3 பிரிவுகளிலும் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பவானி நெடுஞ்சாலைத்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் வேகத்தடை அமைக்க ஆவன செய்வார்களா?


மேலும் செய்திகள்