Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 March 2023 2:05 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#28184

விபத்து ஏற்படும் அபாயம்

மற்றவை

ஈரோடு அடுத்துள்ள சோலாரில் கரூர் மெயின் ரோட்டின் ஓரம் ஆங்காங்கே குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதில் தீயும் வைத்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டு ஓரம் குப்பை கொட்டுவதையும், அங்கு தீ வைப்பதையும் தடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 2:03 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#28180

ரெயில்வே பயணிகள் அவதி

மற்றவை

ஈரோடு ரெயில் நிலையம் முன்பு சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். மேலும், ரெயில் நிலைய வளாகத்தில் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், துர்நாற்றத்தை தாங்க முடியாமல் கடும் அவதி அடைகிறார்கள். எனவே அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிவிட்டு, சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 2:01 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#28177

சேதமடைந்த சிமெண்டு சாலை

சேதமடைந்த சிமெண்டு சாலைமற்றவை

ஈரோடு நாடார்மேடு நேரு வீதியில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளாக அங்கு சாலை சீரமைக்கப்படவில்லை. குண்டும், குழியுமாக இருப்பதால் முதியவர்கள் நடந்து செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும், சாக்கடையின் ஓரங்களில் புதர் மண்டி கிடக்கிறது. எனவே அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:58 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#28172

பழுதடைந்த பாதை

போக்குவரத்து

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் சாவடிப்பாளையம் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் உள்ள பாதை குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். 4 சக்கர வாகனங்களும் தடுமாறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த ரோட்டை சீரமைக்க ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:57 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#28169

புதுப்பிக்கவேண்டும்

சாலை

சித்தோட்டில் இருந்து பவானி மற்றும் பெருந்துறை செல்லும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் வேலை நடைபெற்று கெண்டிருக்கும் நிலையிலேயே சில நாட்களில் விரிசல்கள் மற்றும் குழிகள் ஏற்பட்டு வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடனும் பயத்துடனும் செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை உடனே புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:55 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#28167

ரோடு போடுவார்களா?

ரோடு போடுவார்களா?சாலை

திண்டல் சக்தி நகரில் ரோடு போடுவதற்காக ஆயத்த பணிகள் தொடங்கின. ஆனால் ஜல்லிகள் கொட்டி சரி செய்த பின்னர் ரோடு போடவில்லை. இதனால் அந்த பாதையில் நடந்து செல்ல கூட முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சக்தி நகரில் விரைந்து ரோடு போட ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 1:52 PM GMT
Mr. P.Saravanan | பவானி
#28164

வேகத்தடைகள் வேண்டும்

சாலை

அந்தியூர் தவுட்டுப்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே 3 சாலைகள் சந்திக்கும் பிரிவு உள்ளது. இந்த 3 பிரிவுகளிலும் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பவானி நெடுஞ்சாலைத்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் வேகத்தடை அமைக்க ஆவன செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 1:20 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#26888

நாய்கள் தொல்லை

மற்றவை

ஈரோட்டில் பெரும்பாலும் அனைத்து தெருக்களிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக நாச்சியப்பா வீதி, வாசுகி வீதி, அகில்மேடு வீதிகளில் ஏராளமான நாய்கள் காணப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் வருபவர்களை நாய்கள் துரத்துவதால் அவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். நடந்து செல்பவர்களையும் நாய்கள் கடிக்க ஓடி வருகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருவில் சுற்றும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 10:33 AM GMT
Mr. P.Saravanan | பவானிசாகர்
#26825

ஆபத்தான மேல்நிலை தொட்டி

ஆபத்தான மேல்நிலை தொட்டிமற்றவை

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் உப்புபள்ளம் பள்ளிக்கூடம் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழ்தளம் மிகவும் பழுதாகி விரிசல் அடைந்து கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ள இந்த தொட்டியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 8:19 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#26812

துர்நாற்றம் தாங்கவில்லை

கழிவுநீர்

ஈரோடு சூரம்பட்டி தபால் அலுவலகம் அருகே பாதாள சாக்கடை நிரம்பி மூடியில் இருந்து கழிவு நீர் வெளியேறி பாதையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அதனால் காற்று மாசுபாடும் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதை நேரில் வந்து பார்த்து உடனே செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 8:18 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#26811

ரோட்டோரம் குப்பை

ரோட்டோரம் குப்பைகுப்பை

கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் இருந்து கரட்டுர் பிரிவு வருகிறது. அங்கு ரோட்டோரம் 4 இடங்களில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குவிந்துள்ள குவிந்துள்ள குப்பைகளை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 8:16 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#26808

ஓடையில் ஆக்கிரமிப்பு

ஓடையில் ஆக்கிரமிப்புதண்ணீர்

கோபியில் இருந்து மேட்டு வளவு செல்லும் ரோட்டில் (பாரியூரை இணைக்கும் ரோடு) கீரிப்பிள்ள ஓடை செல்கிறது. அந்த ஓடை ஆக்கரமிக்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick