Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2023 8:11 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#26807

குவிந்துள்ள குப்பைகள்

குப்பை

ஈரோடு பெரியார்நகர் வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே ஏ.பி.சி. ஆஸ்பத்திரி பின்புறம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு தேவையற்ற குப்பைகளை கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள். புல் புதர் மண்டி கிடக்கிறது. அங்கு தேங்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் புதராகவும், மறைவிடமாகவும் இருப்பதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 1:23 PM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#25567

பாராட்டு

பாராட்டுமற்றவை

அந்தியூர் அருகே உள்ள ஓசப்பட்டியில் இருந்து வெள்ளாளபாளையம் செல்லக்கூடிய இணைப்பு சாலையில் நீரோடை பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் மண் கொட்டி தற்காலிகமாக போக்குவரத்துக்காக சரிசெய்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 1:18 PM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#25566

பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியில் பழுதான டிரான்பார்மர் இருப்பது ஆபத்தை விளைவிக்கும். எனவே மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு. பழைய டிரான்பார்மரை அகற்றிவிட்டு புதிதாக அமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 10:21 AM GMT
Mr. P.Saravanan | மொடக்குறிச்சி
#25511

பாதை மாறும் பஸ்கள்

போக்குவரத்து

ஈரோட்டில் இருந்து கரூர், திருச்சி செல்லும் பஸ்கள் கருமாண்டம்பாளையத்தில் இருந்து கீழ்ரோடு, மேல்ரோடு என 2 பாதைகள் வழியாக செல்கின்றன. இதில் காரணாம்பாளையத்திலும், வெங்கம்பூரிலும் ரெயில்வே கேட் இருப்பதால் கீழ்ரோட்டில் செல்லவேண்டிய சில அரசு பஸ்களும் மேல்ரோடு வழியாக அதாவது நடுப்பாளையம், தாமரைப்பாளையம் வழியாக சென்றுவிடுகின்றன. இதனால் கொளாநல்லி, கருங்கரடு, ஊஞ்சலூர், காசிபாளையம், வெங்கம்பூர் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள் பாதை மாறாமல் உரிய பாதையில் செல்கிறதா?...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 8:23 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#25503

குடிநீர் வேண்டும்

தண்ணீர்

ஈரோடு பஸ்நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே தண்ணீர் தொட்டி வைக்க்கப்பட்டு இருந்த இடங்களும் மாறிவிட்டன. அதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் தாகத்துக்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் குறைந்தது 3 இடங்களிலாவது சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரை தொட்டியில் வைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 6:14 AM GMT
Mr. P.Saravanan | மொடக்குறிச்சி
#25497

வேகத்தடை வேண்டும்

சாலை

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் ஊஞ்சலூர் உள்ளது. இங்குள்ள பஸ்நிறுத்தத்தில் ரோடு வளைவாக காணப்படுகிறது. அதனால் அருகே வரும் வரை எதிரே வரும் வாகனம் தெரியாது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் பஸ் நிறுத்தம் அருகேயே தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. எனவே ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 6:12 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#25496

புகை மூட்டம்

புகை மூட்டம்சாலை

ஈரோடு கரூர்-ரோட்டில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம் செல்லும் வழியில் சாலையோரத்தில் குப்பை எரிக்கப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு அடுத்தடுத்து சாலையோரத்தில் குப்பையை குவித்து தீ வைக்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை ஓரத்தில் குப்பை குவிப்பதையும், தீ வைத்து புகை மூட்டம் ஏற்படுத்துவதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 6:09 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#25495

தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகியம்மாள் லே-அவுட் மற்றும் சகன் வீதியில் சாக்கடை கால்வாய் கடந்த பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக கொசு தொல்லை அதிகமாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் பலருக்கு காய்ச்சல், இருமல் போன்ற நோய்களும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 6:08 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#25494

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

ஈரோடு குமரன்நகரில் ரோட்டோரமாக பாதாள சாக்கடை அமைக்க மண் தோண்டப்பட்டது. ஆனால் மண் அகற்றப்படாமல் இருப்பதால் அதில் புற்கள் வளர்ந்து அது மின்கம்பத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் பாக்சை மூடியபடி காணப்படுகிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே மின்கம்பத்தின் மீது வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 6:37 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#24402

விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

சாலை

நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் ஊராட்சி ஒன்றியம் நல்லகட்டிபாளையத்தில் மலையப்பாளையம்-அவினாசி சாலையில் பள்ளம் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே பள்ளத்தை சீரமைப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 6:32 AM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#24400

அழிந்த பெயர் பலகை

மற்றவை

அந்தியூர் துணை மின்நிலையத்தில் அதற்கான பெயர் பலகை உள்ளது. இந்த பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் அழிந்து வெறும் பலகை மட்டுமே பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அரசு துறையின் பெயர் பலகை இவ்வாறு இருப்பது முறையாக இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெயர் பலகையை புதிப்பித்து எழுதி வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 6:31 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#24399

சுகாதார பாதிப்பு

சுகாதார பாதிப்புகுப்பை

கோபியில் இருந்து நாதிபாளையம் செல்லும் ரோட்டில் கலராமணி என்னும் இடத்தில் ரோட்டோரம் 2 இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் காற்று பலமாக வீசும்போது குப்பை துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மேல் படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை உடனே அகற்றவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick