விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-03-01 13:39 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் இருந்து நடுக்கடை இணைப்பு சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்