குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-15 17:19 GMT

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நகர வங்கி தெரு, பூக்கடை வீதி வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றனர். இந்த சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் இரண்டு சக்கர வாகனங்கள், சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். அப்படி வரும் வயதானவர்கள் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே பூக்கடை வீதி மற்றும் நகர வங்கி தெருக்களின் சாலைகளை உடனடியாக சீர் செய்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வள்ளுவன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்