வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்

Update: 2023-02-15 17:18 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அளவாய்பட்டி பகுதியில் முனியப்பன் கோவில் முதல் நடுப்பட்டி செல்லும் சாலை வரை புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இதில் புதிதாக 6 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விழுந்து விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து வெள்ளை வர்ணம் பூசி விபத்து இல்லாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-கோபாலகிருஷ்ணன், அளவாய்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்