வேகத்தடை அவசியம்

Update: 2023-02-08 16:07 GMT

நாமக்கல் 24-வது வார்டு சேலம்-ஈரோடு புற வழி சாலை உழவர் சந்தையில் இருந்து நெடுஞ்சாலை வரை இந்த வார்டு வழியாக செல்கிறது. இந்த சாலையில் பஸ் மற்றும் லாரி, கார்கள் வேகமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செல்கிறது. மேலும் இந்த சாலையில் நிறைய இணைப்பு சாலை உள்ளது. எனவே இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சாலையில் வேகத்தடை அமைத்து வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.சதீஸ்குமார், நாமக்கல்.

மேலும் செய்திகள்