வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-01 10:50 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சி, காகம்பட்டியில் இருந்து நந்தவன பள்ளம் செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்