மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள மணி நகரில் இது வரை தார்ச்சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழை காலத்தில் மண்சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், செம்பனார்கோவில்.