வேகத்தடை வேண்டும்

Update: 2022-12-07 14:27 GMT


நாகை மாவட்டம் திருமருகல் செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருமருகல் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்