வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-07 13:55 GMT


ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்திரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக குழிகள் தோண்டப்பட்டு தண்ணீர் குழாய், மின்சார கேபிள், டெலிபோன் கேபிள் உள்ளிட்டவை பதிக்கும் பணிகள் நடக்கிறது. ஆனால் இந்த பணிகள் ஒருங்கிணைப்புடன் செயல்படாததால் மீண்டும், மீண்டும் வேலை செய்த வண்ணம் உள்ளனர். பணிகள் முடிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகிறார்கள். எனவே பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்