சேதமான சாலை

Update: 2022-11-27 13:17 GMT

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இருந்து வளையபட்டி செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்து ரோடு சேதமானது. அதை தொடர்ந்து அந்த பகுதியில் மண் கொட்டி சரி செய்யப்பட்டது. தார் சாலையின் மண்கொட்டப்பட்ட பகுதியில் மட்டும் மண் உள்ளதால், அந்த பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக மணலில் சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாத நிலையில் உள்ளது. எனவே அந்த சிறிய பகுதி மட்டும் உடனடியாக தார் சாலையாக அமைக்க சம்பந்தப்பட்டதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்