சாலை பணி முடிக்கப்படுமா?

Update: 2022-11-27 13:15 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம்- சங்ககிரி மெயின் ரோட்டில் மாணவர் விடுதி எதிரே சாலை விரிவாக்க பணிக்காக பாதி அளவு தோண்டிய நிலையில் மக்கள் போராட்டத்தினால் கைவிடப்பட்டது. அதை தடுப்பு கூட வைக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் நிரம்பியதால் வாகன ஓட்டிகள் அந்த குழியில் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைந்து பணியை முடிக்க வேண்டும்.

-பாண்டியன், தாரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்