வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-27 13:08 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையம் அருகில் ஏ.டி.எம். லாட்ஜ் எதிரில் உள்ள சாலையை சரியாக போடாமல் அரைகுறையாக விட்டுவிட்டனர். ஒரு வருடம் ஆகியும் இதே நிலையில் இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதனால் தினமும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சாலையை சரி செய்ய சொல்லி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதியில் நிற்கும் சாலையை முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.

-காதர், வர்ணத்தீர்த்தம், அரூர்.

மேலும் செய்திகள்