சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-23 15:00 GMT


திருவாரூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாகை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் ஏராளமானோர் பஸ்சில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்