சேதமடைந்த சாலை

Update: 2022-11-20 15:59 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் சிமெண்டு சாலை அமைத்து போடப்பட்டு சுமார் 15 வருடங்களுக்கு மேலாகிறது. தற்போது இந்த சிமெண்டு சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து பஸ் நிலையம் முழுவதும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோரும், பயணிகள் நடந்து செல்வதுக்கும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்