விபத்தை தடுக்க தடுப்புகள் அவசியம்

Update: 2022-11-16 17:46 GMT

ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிக்கதாக உள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார் என நூற்றுக்கணக்கான பஸ்களும், லாரி போன்ற கனரக வாகனங்களும், இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தை தடுக்கும் வகையில் நாமக்கல் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்க வேண்டும். ஏற்கனவே அந்த பகுதியில் தடுப்புகள் வைத்திருந்தனர். ஆனால் இடையில் அதை எடுத்து விட்டனர். எனவே மீண்டும் அங்கு தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்