பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-16 11:40 GMT


நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் -கருவேலங்கடையை இணைக்கும் பத்மநாபன் சாலை குறுக்கே ஆறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் கீழ்பாலமாக உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் பாலத்தை மூழ்கி விடுகிறது. இதனால் பாலம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,நாகை

மேலும் செய்திகள்