பாலத்தின் கீழே பள்ளம்

Update: 2022-11-16 05:58 GMT


ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் சாவடிப்பாளையம் அருகே ரெயில்வே பாலம் செல்கிறது. இந்த பாலத்தின் கீழே உள்ள ரோட்டில் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பெரிய பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டன. மேலும் அருகே உள்ள உள்ள கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் இந்த ரோட்டில் வழிந்தோடுகிறது. அதனால் ரோடு மிகவும் மோசமடைந்துவிட்டது. அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் கீழே உள்ள ரோட்டை உடனே பராமரிக்கவேண்டும்.


மேலும் செய்திகள்