சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-09 15:49 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் சிங்கிலிபட்டி கிராமம். கொண்டிசெட்டிபட்டி ஏரி அருகே காளியம்மன் கோவிலின் வழியாக பொதுமக்கள் சிங்கிலிபட்டி கிராமத்திற்கு சென்று வந்தனர். சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த ஏரி நிரம்பி விட்டது. காளியம்மன் கோவிலின் அருகே சாலையின் குறுக்கே மழைநீர் செல்ல பாதையை துண்டித்தனர். இதனால் மக்கள் வேறு பாதை வழியாக ஊருக்கு சென்று வந்தனர். தற்போது மழைநீர் வடிந்து விட்டதால் அந்தப் பாதை குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த வழியே பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதையை சரி செய்து பொதுமக்களின் வழக்கமான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சா.விஜயன், சிங்கிலிபட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்