சேதமடைந்த சாலை

Update: 2022-11-06 16:17 GMT

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி காமராஜர் சிலை அருகில் பைபாஸ் கிராஸ் ரோட்டில் சாக்கடை கால்வாய் நீர் தேங்கி சாலையில் செல்கிறது. அந்த இடத்தில் சாலையும் சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்