தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-11-02 12:06 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கூத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செதலபதி மேல ஆதிதிராவிடர் தெருவில் தார்ச்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போதுமழை பெய்து வருவதால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கோகுல்ராஜ்,செதலபதி 

மேலும் செய்திகள்